கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய இந்தியன் ரெயில்வே இயக்கி வரும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 14-ந் தேதி மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழகத்துக்கு முதல் ஆக்சிஜன் ரெயில் வந்தது. அதன் மூலம் 80 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து ஜார்கண்ட், ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலமாக சென்னை தண்டையார்பேட்டை, கோவை மதுக்கரைக்கு ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது. இதுவரை தமிழகத்துக்கு 15 ஆக்சிஜன் ரெயில் வந்துள்ள நிலையில், நேற்று 16-வது ஆக்சிஜன் ரெயில் சென்னை தண்டையார்பேட்டைக்கு காலை 11.45 மணிக்கு வந்தது. அதில் 84.1 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுவரை 1024.18 டன் ஆக்சிஜன் தமிழகத்துக்கு வந்துள்ளது.
மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோ
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே
கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவ
இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார
கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதி
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி
தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள
மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையி