முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படாமல் இருக்க அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக காய்கறிகள், பழங்கள், ரொட்டி, பால் போன்றவை தாராளமாக கிடைத்து வருகிறது.
மளிகை பொருட்கள் விற்கும் கடைக்காரர்கள் வீடு, வீடாக பொருட்களை விநியோகிக்க அரசு சிறப்பு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
இதற்காக மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் அனுமதி பெற்றுள்ள கடைக்காரர்கள் வாகனத்தில் சென்று வீடு, வீடாக மளிகை பொருட்களை வழங்க அனுமதி அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் 4500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு அனுமதி அட்டை கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 2400 வியாபாரிகளுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 7486 இரு சக்கர வாகனங்கள் 5536 பெரிய வாகனங்கள் என 13 ஆயிரத்து 22 வாகனங்களுக்கு தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மளிகை மற்றும் காய்கறிகளின் விலையை கூடுதல் விலைக்கு யாரேனும் விற்பனை செய்தால் அது குறித்து 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலைய
இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும்
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நா
சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறா
மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடர
நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமை
அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரெ
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர
குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்
பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப
