கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது மந்திரிசபையில் தொழில் மற்றும் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்து வருபவர் கட்டும்பா வாமலா.
முன்னாள் ராணுவ தளபதியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு மந்திரியாக பொறுப்பேற்றார்.இந்த நிலையில் 64 வயதான மந்திரி கட்டும்பா வாமலா நேற்று தலைநகர் கம்பாலாவில் உள்ள புறநகர் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அவரது இளம்வயது மகள் நாந்தோங்கோ உடன் இருந்தார்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மர்ம நபர்கள் சிலர் மந்திரி கட்டும்பா வாமலாவின் கார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அவரது மகள் நாந்தோங்கோ மற்றும் கார் டிரைவர் ஆகியோரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவர்கள் இருவரும் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். அதே சமயம் மந்திரி கட்டும்பா வாமலா காயங்களுடன் உயிர் தப்பினார்.
அவர் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உகாண்டாவில் மந்திரியை கொலை செய்ய நடந்த சதியில் அவரது இளம்வயது மகள் கொல்லப்பட்டது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்னும் ஒரு சில தினங்களில் ர
புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உள
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்ப அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில உலகம் முழுவதும்
இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு ரஷ்யாவுக்கு எதிரான போரில் 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து துபாயில் வசித்து வருபவர் மனோஜ் சாமுவேல். இவரது மனைவி ச அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடும் பனிப அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படு இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமை
