பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் இன்று நாடுதளுவிய ரீதியில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்தவகையில் வவுனியா வைத்தியசாலை ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா கால விசேட கொடுப்பனவு, விசேட விடுமுறை நாட்களில் கடமைக்கு சமூகமளித்தால் விசேட கொடுப்பனவு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் கொரோனா தடுப்பு செயலணி அமைத்தல் உட்பட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்தே இன்று பிற்பகல் 12 மணியிலிருந்து 12:30 வரையும் இடம்பெற்றிருந்தது.
வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற போராட்ட இடத்திற்கு வருகைதந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் குறித்த பிரச்சினை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் தீர்வினை பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார். பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போது இவர்களினுடைய போராட்டம் நியாயமானது. எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியுடனான ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு சென்று உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுத்து நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.


சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவ
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிச
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொட
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம்
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடா
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ‘நிறைவுகாண் மரு
ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்
எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்
மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட
