More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொழும்பு துறைமுகம் அருகே தீப்பிடித்த சரக்கு கப்பல் தண்ணீரில் மூழ்கியது!
கொழும்பு துறைமுகம் அருகே தீப்பிடித்த சரக்கு கப்பல் தண்ணீரில் மூழ்கியது!
Jun 03
கொழும்பு துறைமுகம் அருகே தீப்பிடித்த சரக்கு கப்பல் தண்ணீரில் மூழ்கியது!

சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இருந்து 25 டன் நைட்ரிக் ஆசிட் ரசாயன பொருட்களும், அழகு சாதன பொருட்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களும் ஏற்றப்பட்ட ஒரு சிங்கப்பூர் சரக்கு கப்பல், கொழும்பு துறைமுகத்துக்கு புறப்பட்டது. எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற அக்கப்பலில், 5 இந்தியர்கள் உள்பட 25 சிப்பந்திகள் இருந்தனர்.



கடந்த 20-ந் தேதி, அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை நெருங்கியபோது, திடீரென கப்பல் தீப்பிடித்துக்கொண்டது. நைட்ரிக் ஆசிட் கசிந்ததால் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த கப்பல், கொழும்பு துறைமுகத்துக்கு 9 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.



கப்பலில் இருந்த 25 சிப்பந்திகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியா 2 கப்பல்களை அனுப்பி வைத்தது. 11 நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் தீ அணைக்கப்பட்டது. கப்பல் கடலில் மூழ்கினால், சுற்றுச்சூழலுக்கு பெரும் சீர்கேடு ஏற்படும் என்பதால், கப்பலை இழுத்துச்சென்று ஆழ்கடலில் நிறுத்துமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.



அதன்படி, மீட்புப்படையினர் நேற்று காலை கப்பலில் ஏறி அதை இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.



அப்போது, கப்பலின் பின்பகுதி கடலில் மூழ்கத் தொடங்கியது. சில மணி நேரம் கழித்து பேட்டி அளித்த இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் இன்டிகா டி சில்வா, கப்பலின் மேல்தளம் முழுவதும் நீருக்கு அடியில் சென்று விட்டதாக தெரிவித்தார்.



கப்பலில் 325 மெட்ரிக் டன் எண்ணெய் இருக்கிறது. அது கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இலங்கை வரலாற்றில் இவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடு அபாயம் ஏற்பட்டதில்லை என்று அந்நாட்டு சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறினர்.



கப்பல் மூழ்கியதால் அப்பகுதிக்குள் மீன்பிடி படகுகள் நுழையவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா தெரிவித்தார்.



தீவிபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. கப்பலில் பணியில் இருந்த ஒரு இந்திய அதிகாரி மற்றும் 2 ரஷிய அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. அவர்களது பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடா

Jan13

பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து

Jul04

நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய ச

Sep22

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய

Oct24

எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான

Mar05

இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்

Aug24

வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்

Mar23

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி

Oct13

ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்

Dec14

இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல

May30

நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு

Feb11

சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த

May18

யாழ்.திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்க

Feb01

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்க

Mar18

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே ம

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 17 (23:58 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 17 (23:58 pm )
Testing centres