இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கை உயர்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.77 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 2.84 லட்சம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,51,78,011 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,84,601 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் மேலும் 3617 பேர் உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 3,22,512 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 22,28,724 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 20,89,02,44 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்
இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு
கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி
தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்
காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கி
இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலு
இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம ந
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா
சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத
கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகே
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக க
