காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில் ஏழுமலையான் கோவில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 62 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் அரசு 40 ஆண்டு குத்தகைக்கு வழங்கி உள்ளது.
அந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா கலந்து கொண்டார். அடிக்கல் நாட்டியதை குறிக்கும் கல்வெட்டை அவர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கவர்னர் மனோஜ் சின்கா பேசியதாவது:-
மாதா வைஷ்ணோ தேவி மண்ணில் ஏழுமலையான் கோவில் அமைய வேண்டும் என்ற காஷ்மீர் மற்றும் வடஇந்திய மக்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய தேவஸ்தானத்துக்கு நன்றி. இந்த நாள், காஷ்மீருக்கு வரலாற்று சிறப்புமிக்க, பெருமைக்குரிய நாள்.
கோவில் கட்டி முடித்த பிறகு, இது ஆன்மிக சுற்றுலா தலமாக உருவெடுக்கும். முக்கிய பூசாரிகள், மேற்பார்வையாளர்களை தவிர மற்றவர்கள் உள்ளூர் மக்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினாா்.
மத்திய மந்திரிகள் ஜிதேந்திர சிங், கிஷன் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ரூ.33 கோடியே 22 லட்சம் செலவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது. 18 மாதங்களில் கட்டுமான பணி நிறைவடைகிறது. வேதபாடசாலை, விடுதி, திருமண மண்டபம், பக்தர்கள் தங்குமிடம், ஊழியர் குடியிருப்பு, வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் அந்த வளாகத்தில் அமைய உள்ளன.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் த
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள்
தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடு
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 ந
நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன
தமிழகத்தில்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோ திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு ம உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய உங்களுடைய பைக்கை ரயில் மூலமாகவே வெளியூருக்கு ஈசியா அன தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி
