ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் அதானி 2-வது இடத்தில் உள்ளார். இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.5.64 லட்சம் கோடியாகவும், அதானி குழுமங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.9.5 லட்சம் கோடியாகவும் உள்ளது.
அதானியின் கிரீன் எனர்ஜி டிரான்ஸ்மிஷன், எரிவாயு உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட், ஏ.பி.எம். எஸ். இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் ரூ.43,500 கோடி மதிப்பிலான கணக்குகளை தேசிய பிணையம் வைப்பக நிறுவனம் முடக்கியது.
இதன் காரணமாக தேசிய பங்குச்சந்தையில் ரூ.1601.60 ஆக இருந்த பங்கின் விலை நேற்று ரூ.91 குறைந்து ரூ.1510.35 ஆக சரிந்தது.
இதன் காரணமாக அதானி சொத்து மதிப்பில் 1 மணிநேரத்தில் ரூ.73,250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஆசியாவின் 2-வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்)
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ
குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட
மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து,
கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா
அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்