முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டடான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திருமுறிகண்டிப்பிள்ளையார் ஆலயத்தால் ஆலய வருமானத்தின் பத்து இலட்ஷம் ரூபா பெறுமதியில் பயணத்தடை காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டடான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில் 400 குடும்பங்களுக்கும் இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் 200 குடும்பங்களுக்குமாக 600 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆலய வளாகத்தில் இருந்து பிரதேச செயலக அதிகாரிகள் வாகனங்களில் பொருட்களை ஏற்றிச் சென்று வீடு வீடாக உலர் உணவு பொருட்களை மக்களுக்கு கையளித்தனர்.
இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டடான் உதவி பிரதேச செயலாளர் இ.றமேஷ் ஒட்டுசுட்டடான் பிரதேச இந்து கலாச்சார உத்தியோகத்தர் சி.மோகனராசா திருமுறிகண்டி,இந்துபுரம் கிராம அலுவலர்கள் திருமுறிகண்டி பிள்ளையாரை ஆலய குரு ஒட்டுசுட்டடான் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்துகொண்டு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியகம காலனி பகுதியில
வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உற
இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம்
இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க
காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத த
கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்
அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜப
தமிழினத்துக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொல
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நில
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப
வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட
உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க
யாழ். மாவட்டத்தில் நாளை (08) முதல் தேநீர், பால் தேநீர், ப
நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந
