முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மாநிலத்தில் ஜூன் 21 முதல் ஜூன் 30 வரை தினந்தோறும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் அரசுப் பணிகள் எதுவும் நடைபெறாது.
ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தடுப்பூசி திட்டத்தில் கவனம் செலுத்தும். அடுத்த 10 நாள்களுக்கு தினந்தோறும் 2.80 லட்சம் முதல் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிந்தால், ஜூலை மாதத்திலும் அசாம் மாநிலத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்.
ஏற்கெனவே மாநிலத்தில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இந்த மாதத்திற்குள் தடுப்பூசி போடுமாறு ஊழியர்களைக் கேட்டுக்கொண்டார். பிற அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் தொழிலாளர்கள், மக்களை ஊக்குவிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் த
இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 த
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு
ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட
இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உ
கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களை சுகாதாரத் துறை அமை
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருந
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரத
