மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினார் பிரித்விராஜ். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அப்படத்தின் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
இதனிடையே, மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணி ‘ப்ரோ டாடி’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளது. பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமாக இது அமைந்துள்ளது. குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகை மீனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகை மீனா ஏற்கனவே திரிஷ்யம் 1, 2 ஆகிய படங்களில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாடு திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு த
நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேக
ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப
கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரி
கேரள பாப் பாடகர் வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார்
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி,
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ
தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம்
இந்தி திரையுலக பிரபல பெண் இயக்குனர் பராகான். இவர் தொலை
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜி
நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக க
இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மு
