சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடிப்படையிலேயே நாளை (21) நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாளை(21) அதிகாலை 4 மணியுடன் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது. எனினும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில் நடமாட்டக்கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
அதேவேளை மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்.
எனவே நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் இயன்றவரை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும்.
அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் இயங்க வேண்டும்.
ஆசன எண்ணிக்கைக்கு அமைவான பயணிகளுடன் பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெற வேண்டும்.
பொது இடங்களில் ஒன்றுகூடல் மற்றும் விருந்துபசாரங்களை நடத்துதல் என்பன முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன.
இதேவேளை வர்த்தக நிலையங்கள், சிறப்பு அங்காடிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் என்பனவற்றில் சுகாதார நடைமுறைகள் உரியவாறு பின்றபற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி
கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தம
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இந
ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண
நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட
சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ
வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிக
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
நாட்டில் எதிர்வரும் காலங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏ
