நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.
அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இதையடுத்து நடிகை நயன்தாரா மேலும் 3 புதிய படங்களில் நடிக்க இருக்கிறாராம். அதில் ஒருபடம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார். மற்ற 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவையாம். தமிழில் தயாராகும் இந்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூல
சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானச
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா,
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ
தமிழ் சினிமாவின் உச்ச ந
பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீ
பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஆதிபுருஷ் திரைப்படத்தின
தமிழில் 2013ல் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்&rsqu
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் க
நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் க
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர
