நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.
அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இதையடுத்து நடிகை நயன்தாரா மேலும் 3 புதிய படங்களில் நடிக்க இருக்கிறாராம். அதில் ஒருபடம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார். மற்ற 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவையாம். தமிழில் தயாராகும் இந்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழி
நடிகை துனிஷா சர்மா கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில்
அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் பெற்ற படங்களில் மக்
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ர
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருப
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி படு
தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் தன
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்ட
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் து
சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்ட
நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத
