கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உலர் உணவு பொதிகள் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படத்தப்பட்ட மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு, மீராவோடை கிழக்கு மற்றும், மீராவோடை மேற்கு ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்குமான உலர் உணவு பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் வழிகாட்டலில் இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் தவிர்ந்த 1211 குடும்பங்களுக்கு அரிசி, பால்மா, கோதுமை, சீனி, நூடில்ஸ் அடங்கலான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதியில் முதற்கட்டமாக ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. குறித்த உலருணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று உலர் உணவு பொதிகளை வழங்கி வருகின்றனர்.


நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடை
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால
இவ்வருடம் உள்நாட்டு பால் உற்பத்தி 70 % ஆக அதிகரிக்கப்பட
இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்
இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொ
நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே
இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் சாரதிக்கு கொரோனா
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கட
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
