ஜி 20 மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இத்தாலி நாட்டின் ரோம் நகருக்குச் செல்கிறார்.
இதுகுறித்து, மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்சி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அவர் கூறுகையில், கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் நாளை (இன்று) கிரீஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார். கடந்த 2003-ம் ஆண்டுக்கு பின்பு முதன்முறையாக அந்நாட்டுக்கு மேற்கொள்ளும் மத்திய வெளிவிவகார மந்திரி அளவிலான பயணம் இதுவாகும்.
25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில் கிரீஸ் நாட்டின் வெளிவிவகார மந்திரியுடன், ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின், அவர் இத்தாலி நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
இதில், ரோம் நகரில் நடைபெறும் ஜி20 மந்திரிகள் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். ஜி20 மந்திரிகள் உச்சி மாநாடு 2021ல் வெளிவிவகார மந்திரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை கலந்து கொள்ள உள்ளன.
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம
ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே
ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டி
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய ச
ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்ற
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் யோகா நி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி
தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரி
நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் திட்டத்த
துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம
கொரோனா தொற்று நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்காக பல்
மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ
கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொர
