அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 3-வது அணி அமைப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் இன்றி பாஜகவுக்கு எதிரான அணியை அமைக்க முடியாது. இதற்கான சாத்திய கூறுகள் இல்லை" என்றார்.
மேலும் மராட்டியத்தில் வரும் தேர்தல்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று நானா படோலே கூறி வருகிறார். இந்த சமயத்தில் தேர்தல் பற்றி பேசினால் மக்கள் நம்மை செருப்பால் அடிப்பார்கள் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பகிரங்கமாக நானா படோலேயை எச்சரித்தார். அதே வேளையில் நீங்கள் தனித்து போட்டியிட்டால், நாங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்தார். .
இதற்கு பதிலளித்த நானா படோலே, வரும் தேர்தல்களில் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அதற்காக எனது வாழ்த்துக்கள் என்று பதிலளித்தார்.
கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர
கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச
முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என த
இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் டாக்டர் தருண், ஏற இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிரா பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகே பிக்பாஸ் பிரபலம்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை
