மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் சோனியாகாந்தி 24-ந் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
வேளாண் சட்டங்கள், கொரோனா விவகாரம், பொருளாதாரம் உள்படபல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசின் அணுகுமுறையை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்கு முன்பாக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கூட்டத்தை வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூட்டி உள்ளார். காணொலி காட்சி மூலமாக இக்கூட்டம் நடக்கிறது.
இதில், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. அதற்கான வியூகம் வகுக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வு, தடுப்பூசி பணி, கொரோனா பிரச்சினையை மத்திய அரசு கையாளுவது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவது பற்றி விவாதிக்கப்படுகிறது.
எந்தெந்த பிரச்சினைகளில் மத்திய அரசின் தோல்வியை முன்வைத்து மக்களிடையே பிரசாரம் செய்யலாம் என்று நிர்வாகிகள் யோசனை தெரிவிப்பார்கள். கூட்டத்தில், நாட்டின் கொரோனா நிலவரம், பொருளாதார சூழ்நிலை ஆகியவை பற்றியும் பேசப்படுகிறது.
கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் யானை பாகன் மீ
மனைவி தன் மதுவை குடித்துவிட்டார் என கணவன் அடித்துகொன்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத
சசிகலா த
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிரு
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தி
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்ப
இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ
ர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதி
100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊ
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்