மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் சோனியாகாந்தி 24-ந் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
வேளாண் சட்டங்கள், கொரோனா விவகாரம், பொருளாதாரம் உள்படபல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசின் அணுகுமுறையை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்கு முன்பாக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கூட்டத்தை வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூட்டி உள்ளார். காணொலி காட்சி மூலமாக இக்கூட்டம் நடக்கிறது.
இதில், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. அதற்கான வியூகம் வகுக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வு, தடுப்பூசி பணி, கொரோனா பிரச்சினையை மத்திய அரசு கையாளுவது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவது பற்றி விவாதிக்கப்படுகிறது.
எந்தெந்த பிரச்சினைகளில் மத்திய அரசின் தோல்வியை முன்வைத்து மக்களிடையே பிரசாரம் செய்யலாம் என்று நிர்வாகிகள் யோசனை தெரிவிப்பார்கள். கூட்டத்தில், நாட்டின் கொரோனா நிலவரம், பொருளாதார சூழ்நிலை ஆகியவை பற்றியும் பேசப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீ
ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ
காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகு
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச்
கொரோனா ப
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நி
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான
கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போ
நாய்களின் மோப்ப சக்தி நம்முடைய கற்பனைக்கு எட்டாத ஒன்ற
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற
முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந்
சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர்
