புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பலர் ஒவ்வாமை காரணமாக மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு நேற்று 20 பேர் வரையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனை விட முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் பலர் தர்மபுரம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியபோதும் மயங்கி விழுந்துள்ள பலர் மற்றும் வீடுகளில் இருந்த பலருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் இதுவரை 20 பேர் வரையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்கள்.
இச்சம்பவத்தினை தொடர்ந்து நிர்வாகம் ஆடைத்தொழில்சாலையின் நடவடிக்கைகளை நிறுத்தி பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளது.
ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றி வரும் 1126 பேரில் இதுவரை 900 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் விருப்பம் கொள்ளாத சிலருக்கு தடுப்பூசி ஏற்றப்படவில்லை.என்பதும் குறிப்பிடத்தக்கது
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமி
இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில்
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்
ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேர
பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆர
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்
நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிரு
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூர
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மே
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்
இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப
