தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக், நேற்று தலைநகர் போகோடாவில் இருந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் வெனிசுலாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கோகட்டா நகருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். அவருடன் ராணுவ மந்திரி, உள்துறை மந்திரி மற்றும் நோர்டே டி சாண்டாண்டர் மாகாண கவர்னர் ஆகியோர் பயணித்தனர்.
இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் கோகட்டா நகரில் தரை இறங்கும் சமயத்தில் பயங்கரவாதிகள் ஹெலிகாப்டரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். ஹெலிகாப்டரில் 6 முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. இதனால் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. எனினும் விமானிகள் மிகவும் சாதுரியமாக செயல்பட்டு ஹெலிகாப்டரை பத்திரமாக தரை இறக்கினர். அதனைத் தொடர்ந்து அதிபர் இவான் டியூக் உள்பட ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானிகளின் அசாத்திய திறமையால் ஹெலிகாப்டர் உடனடியாக தரை இறக்கப்பட்டதால் அதிபர் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அதிபரின் ஹெலிகாப்டரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் ப
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.ந
கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, முன்னாள் ஜனா
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ண
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடித்த
மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான
தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சியின் தலைவரா
பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்
ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டி
திபெத் நாட்டுக்கு சீனா உரிமை கோருவது மட்டுமின்றி, அதை
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர