ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வழிபடவும், ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜை செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் உடை மற்றும் உடைமைகள் அடங்கிய பைகள், பெட்டிகள் ஆகியவற்றை பக்தர்கள் கோவிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
இதனால் பக்தர்கள் கோவிலுக்கு அருகில் உள்ள பொருட்கள் பாதுகாப்பு அறையில் டோக்கன் பெற்று பைகள், பெட்டிகளை வைத்து விட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் டோக்கனை திரும்ப வந்து ஒப்படைத்து பை, பெட்டிகளை பெற்றுச் செல்வார்கள்.
இந்தநிலையில் பக்தர்களின் வசதிக்காகவும், கோவிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கோவிலின் முதல் மற்றும் 4-வது கோபுரம் அருகில் பக்தர்களின் உடைமைகள் அடங்கிய பை, பெட்டிகளை சோதனையிட ஸ்கேன் மையங்கள் அமைக்கப்பட்டன.
அந்த மையங்களை நேற்று ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன் ரெட்டி தொடங்கி வத்தார். நிகழ்ச்சியில் கோவில் அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஸ்கேன் மையங்களுக்கு அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜை செய்தனர்.
தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்ட பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவி தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்த வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் த இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள்இ இ ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதி
