உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நான் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காகவோ, ஓட்டு வங்கி அரசியலுக்காகவோ இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் அரசியலில் இல்லை. ஒரு பிம்பத்தைப் பராமரிப்பதில் கவலைப்படவும் இல்லை. தேசத்தை பலப்படுத்தவும், நாட்டின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காகவும்தான் அது செயல்படுகிறது.
முதலில் நாம் இந்தியர்கள். முதலில் இந்தியாதான் இருக்க வேண்டும். மக்கள் எவ்வாறு வழிபாடு நடத்துகிறார்கள் என்பதை வைத்து வேறுபாடு காட்ட முடியாது. இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்ற பயத்தின் சுழற்சியில் முஸ்லிம்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது.
நாட்டில் ஒற்றுமை இல்லாமல் முன்னேற்றம் சாத்தியம் இல்லை. ஒற்றுமையின் அடிப்படை தேசியத்துவமும், முன்னோர்களின் பெருமையும் தான். அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மரபணுதான் உள்ளது. நாம் ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் ஆதிக்கம் இங்கு இருக்க முடியாது. இந்தியர்களின் ஆதிக்கம் தான் இருக்க வேண்டும் என்றார்.
பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வர தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம் தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம் இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்
