நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “ஓ.டி.டி. தளத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதன் மூலம் நடிகர் - நடிகைகள், இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது இயலாத காரியம்.
இதனால் ரசிகர்கள் பார்வை ஓ.டி.டி. பக்கம் திரும்பி இருக்கிறது. இதன் மூலம் படங்களை உலக அளவில் ரசிகர்கள் எல்லோரும் பார்க்கிறார்கள். நல்ல கதையம்சம் இருந்தால் அதை பாராட்டவும் செய்கிறார்கள். பெரிய திரையில் படங்களை பார்த்து சந்தோஷப்படும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேபோல் இப்போது ஓ.டி.டி.யில் வரும் படங்களை விரும்பும் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள்.
பொழுது போக்கு தளங்கள் எத்தனை இருந்தாலும் தியேட்டரில் பெரிய திரையில் படம் பாக்கும் மேஜிக் மட்டும் அப்படியேதான் இருக்கும். ஆனால் சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும். ஓ.டி.டி. தளங்களை நான் ஆதரிக்கிறேன்.’’ இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா
நடிகை ஹன்சிகா மட்டும் நடிக்கும் வித்தியாசமான த்ரில்ல
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந
எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை தி
குக் வித் கோமாளி நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
அஜித் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து வெற்றிக் கொண்டாட்
நடிகை சமந்தா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவர
நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்க
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சரயு ராய் இந்து கடவுள
பிரபல இயக்குநர் ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை
வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரண
