நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புபவர்கள், யாழ்ப்பாணத்தில் இந்தியா முன்னிற்பது குறித்து ஏன் கேட்பதில்லை? என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான நேற்றைய களப் பயணத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சீன தொடர்பாக எதிர்க்கட்சியினருக்கே அதிக பிரச்சினை இருக்கின்றது. அரசுக்கு எந்த நாடு உதவி செய்தாலும், அதன் மூலம் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதே எமது எதிர்பார்ப்பு.
மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்துக்கும் சீனா உதவ முன்வந்தால், நாம் அதனையும் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும்போது, விமான நிலையத்தின் தேவைப்பாடு அதிகம் இருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடம். சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கான சூழலை அமைக்க வேண்டும்.
வடக்கின் வசந்தம், கிழக்கின் வசந்தம் போன்ற திட்டங்களைப் பஸில் ராஜபக்ச முன்னெடுத்தார். பஸில் ராஜபக்ஸ நாடாளுமன்றம் வருவது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” – என்றார்.
உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அ
2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவ
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்ச
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்
எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன்
19 இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழ
இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட
சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்க
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்ம
நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில
பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சு வெற்றிகரமாக ந
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள
