More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வெகுவிரைவில் ராஜபக்சக்கள் அரசியல் புயலுக்குள் சிக்குவர்! தலைமை தாங்கத் தயார் - சம்பிக்க
வெகுவிரைவில் ராஜபக்சக்கள் அரசியல் புயலுக்குள் சிக்குவர்! தலைமை தாங்கத் தயார் - சம்பிக்க
Jul 03
வெகுவிரைவில் ராஜபக்சக்கள் அரசியல் புயலுக்குள் சிக்குவர்! தலைமை தாங்கத் தயார் - சம்பிக்க

ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில் சகல திசைகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றது. அவை வெகுவிரைவில் ராஜபக்சக்களுக்கு எதிரான அரசியல் சூறாவளியாக மாற்றமடையும். அதற்குத் தலைமை தாங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.



என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.



பஸில் ராஜபக்சவுக்கு எந்த அமைச்சுப் பதவியை வழங்கினாலும் அவரால் எதனையும் செய்ய முடியாது என்பது மூன்று மாதங்களிலேயே வெளிப்படும். ராஜபக்சக்கள் நாட்டுக்கு சாபமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



கொரோனா ஒழிப்பு செயற்பாடுகள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை முகாமைத்துவம் செய்ய முடியாத ராஜபக்சக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். இதன் காரணமாக அரசியல் எதிர்ப்பு புயலொன்று அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் உருவாகிக் கொண்டிருக்கின்றது.



அன்று மஹிந்த காற்றைப் பற்றி கூறினார்கள். இன்று ராஜபக்சக்கள் இனி வேண்டாம் என்று கூறி மக்களின் எதிர்க்காற்று ஆரம்பமாகியுள்ளது. சகல துறைகளிலும் ராஜபக்சக்களுக்கு வாக்களித்தவர்கள் இன்று அவர்களது செயற்பாடுகளில் அதிருப்தியடைந்து அவர்களுக்கு எதிரான எதிர்க்காற்றுடன் ஒன்றிணைந்துள்ளனர்.



கடந்த ஏப்ரலில் தாய் நாடான அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பஸில் ராஜபக்ச தற்போது சுற்றுப் பிரயாணமாக நாடு திரும்பியுள்ளார். அவர் தாய் நாடு செல்ல முன்னர் இலங்கையில் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராகக் காணப்பட்டார். ஆனால், எவ்வித நிதி முகாமைத்துவமும் இன்றி நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள இந்தப்  பொருளாதார நெருக்கடிக்கு பஸில் ராஜபக்ச நிச்சயம் பொறுப்புக் கூற வேண்டும்.



எனவே, தற்போது அவருக்கு நிதி அமைச்சு மாத்திரமல்ல, எந்த அமைச்சை வழங்கினாலும் அவரால் எதையும் செய்ய முடியாது. அமைச்சுப் பதவியை வழங்கி மூன்று மாதங்களுக்குள் அதனைக் கண்டுகொள்ளலாம். பஸில் மாத்திரமல்ல எந்தவொரு ராஜபக்சவுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்று நாம் ஏற்கனவே கூறினோம் – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct06

இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித

Aug13

கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செ

Aug11

வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எ

Mar15

இலங்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என இங்கில

Jan23

மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையில், ஹிட்லர் போன்

Mar17

கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்

Apr19

அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூ

Feb01

73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அரச மற்றும

Jan26

இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட

Oct17

இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில

Apr17

வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தி

Jan19

வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ

Jan27

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக ந

Sep19

தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற ந

Apr10

உயர்ந்த  கட்டிடங்களுக்கு  மாறாக    ரம்மியமான  ச

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (03:24 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (03:24 am )
Testing centres