முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கான இணையவழி கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களினதும் பிரதேச செயலாளர்கள் ,துணுக்காய் மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களின் வலயக்கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் பதவிநிலை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்
இதன்போது குறித்த செயற்றிட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது இதில் உள்ள குறைபாடுகள், சவால்கள் என்பன தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு இணைய வசதிகள் இல்லாத இடங்களில் இணைய வசதியை ஏற்படுத்துவது பாதுகாப்பு ஏற்பாடுகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இ
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம்
மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை அட்
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்
சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவ
இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில்
இலங்கையில் கடந்த மாதங்களாக நிலவிய அசாதாரண நிலை காரணமா
நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல
புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ந
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னண
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள
2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் ஒரு மன்னன் அவதரிப்பார் எ
