More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மாநில அரசுகளிடம் 1.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்
மாநில அரசுகளிடம் 1.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்
Jul 08
மாநில அரசுகளிடம் 1.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. தொடக்கம் முதலே மிகவும் வேகமாக நடந்து வரும் இந்த பணிகளால் தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



அதிலும் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்த பணிகள் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் தடுப்பூசி போடும் பணிகளின் வேகம் அதிகரித்து இருக்கிறது.



இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசே நேரடியாக தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.



இதைப்போல தனியார் ஆஸ்பத்திரிகளும் நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உற்பத்தியாளர்களின் 25 சதவீத தடுப்பூசிகள் தனியாருக்கு விற்கப்படுகின்றன.



இந்தநிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் விவரத்தை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி 37.43 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு உள்ளன.



இதில் நேற்று காலை வரை 35.75 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இதன்மூலம் 1.67 கோடி தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமும், தனியார் ஆஸ்பத்திரிகளிடமும் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.



இதைப்போல மேலும் 48.65 லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசிகள் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.



இதற்கிடையே இந்த மாதத்தில் (ஜூலை) இதுவரை 2.19 கோடி தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.



முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் கடந்த வாரத்தில் 32 சதவீதம் குறைவாகவே தடுப்பூசி வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில், இந்த மாதம் கிடைக்கும் மொத்த தடுப்பூசி அளவு குறித்து ஏற்கனவே மாநில அரசுகளுக்கு தெரிவித்து இருப்பதாகவும், அந்தவகையில் இந்த மாதத்துக்கான 12 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்களில், 2.19 கோடி டோஸ்கள் வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளது.



அதேநேரம் கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்பட்டால், அது குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஏற்கனவே அறிவுறுத்தி இருந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க

Aug29

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்க

Oct05

உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய ப

Mar11

டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்

Apr13

திருப்பதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 17-ம் தேதி இடைத்த

Aug18

கேரளாவில்  கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்

Aug26

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடிய

Aug04
Jun16

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலம

Mar25

தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சேலம் தொகுதியில் போட்டிய

Feb23

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான

May31

தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங

Feb05

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடிய

Jan19

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக ம

Apr30

 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (08:50 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (08:50 am )
Testing centres