அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எத்தகைய முடிவை எடுப்பார் என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
20 ஐ ஆதரித்திருந்தாலும் ஆளுங்கட்சியில் இணைவது தொடர்பான அறிவிப்பை அரவிந்குமார் இன்னும் வெளியிடவில்லை. ஆளுந்தரப்பில் இருந்து அவருக்குப் பதவிகள் எதுவும் வழங்கப்படவும் இல்லை. எதிர்காலத்தில் வழங்கப்படுமா என்பது பற்றியும் எதுவும் அறிவிக்கப்படவும் இல்லை.
எனவே, எதிரணியில் இருந்து 20 இற்காக அரசுக்கு ஆதரவு வழங்கியதுபோல், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போதும் அரவிந்குமார் . உதய கம்மன்பிலவை ஆதரித்து பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
குறிப்பாக வாக்கெடுப்பில் அவர் பங்கேற்காமல் இருந்தால்கூட, பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவேமாட்டார் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்படாததாலும், மக்களின் பக்கம் நின்றும் பிரேரணைக்கு அரவிந்குமார் ஆதரவு வழங்கக்கூடும் எனவும் அவருக்கு நெருக்கமான சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
பாதுக்க - அங்கம்பிட்டியவில் மனைவியின் உடலில் ஒருதுண்ட
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு
நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த
15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயே
மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி
கண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி
நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இ
கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி
