குடல் பாதிப்புக்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு கடந்த 4-ந்தேதி அறுவை சிகிச்சை நடந்தது.
பெருங்குடல் சுருக்கத்தால் அவதிப்பட்ட அவருக்கு, பெருங்குடலின் இடதுபாகம் அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் வேகமாக அவர் குணமடைந்து வருகிறார்.
எனினும் அறுவை சிகிச்சை நடந்து 3 நாட்களுக்குப்பின், அதாவது நேற்று முன்தினம் மாலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனவே அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதேநேரம் நேற்று காலையில் அவருக்கு வழக்கமான பரிசோதனைகளுடன், மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது.
போப் பிரான்சிசால் சாப்பிடவும், துணையின்றி நடக்கவும் முடிவதாகவும் வாடிகன் கூறியுள்ளது. ஆஸ்பத்திரியில் அவ்வப்போது நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர், அங்குள்ள இளம் புற்றுநோயாளிகளுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதாகவும் வாடிகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற்று திரும்புவதற்காக உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும்
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமான சே
ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறு
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் 20 ஆண்டுகால போரை முடிவுக்
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட
உக்ரைனுக்குள் ஊடுருவியதால் பல குடும்பங்களின் பிரிவு
உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் இருந்து மக்கள் ரஷ்
ஆசியா மற்றும் ஆப்ரிக்கா முழுவதும் துறைமுகங்கள் மற்று
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோ
ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ
தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தின
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச
