சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் வரும் திங்கட்கிழமை முதல் வார நாட்களில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட உள்ளன.
நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
கடந்த மாதம் 21-ம் தேதி முதல் கடந்த 9-ம் தேதி வரை 40 பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.8 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதால் நாளை முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது. அதாவது ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்துறை
சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட ச உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கொரோனாவால கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து, துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்ன 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக ஆளுநரின் கான்வாயை நோக்கி கருப்புக் கொடிகளை வீசி
