ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. ரசல் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 51 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதலில் ரன்களை குவித்தது.
7.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி அதன்பின் சரிவைக் கண்டது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டாடனார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மெக்காய் 4 விக்கெட், வால்ஷ் 3 விக்கெட், பாபியன் ஆலன் 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது மெக்காய்க்கு அளிக்கப்பட்டது.
இந்த வெற்றியின்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி சே
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிற
இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அ
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ
ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ப
சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர
வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி
ஒன்பதாவது கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன
20 உலக கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன
