மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதிகளின்படி சமூக ஊடக நிறுவனங்கள் குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ரேகா பாலி விசாரித்து வருகிறார்.
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா ஆஜராகி, புதிய விதிகளை பின்பற்ற டுவிட்டர் நிறுவனத்துக்கு 3 மாத கால அவகாசம் அளித்தும் இதுவரை பின்பற்றவில்லை என வாதிட்டார்.
டுவிட்டர் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் சஜன் பூவையா, இதுதொடர்பாக சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்திடம் கலந்தாலோசித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என கோரினார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை. எனவே, குறைதீர் அதிகாரி நியமனம் தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் ஜூலை 8-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிவரும் என தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு கல்வி ஆண்
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ
மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப
கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய
இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் “ரான்சம்வேர்&
டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிரா
சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை
இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்
சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை
பிரதமர் நரேந்திர மோடி தனது 2 நாள் வங்கதேச பயணத்தை முடித
தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந
இலங்கையில் புதிய பிரதமரின் நியமனத்துக்கு சமாந்தரமாக
