சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
டெங்கு வைரஸ் காய்ச்சலை தடுக்க ஆளில்லா ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் தங்களது வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தண்ணீர் தேங்கியது கண்டறியப்பட்டால் 100 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் கடந்த 13 நாட்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ தொற்று குறைந்திருக்கும் சூழலில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் தென்மேற்கு பருவக் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மாவட்டந்தோறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என
பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்ப
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியா
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப
கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோ மதுரையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ப இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலைய சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்த அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் மற்றும் சூரத போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல
