தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட ஐ போன் ஒன்று, நான்கு சைக்கிள்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சுன்னாகம் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் இரண்டு நாள்களுக்கு முன்னர் திருட்டு இடம்பெற்றிருந்தது. அதுதொடர்பில் தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், சந்தேகநபர்கள் இருவரைக் கைதுசெய்ததுடன் திருட்டுப் பொருள்களையும் அவர்களிடம் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவருக்கும் வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் காவல்துறையினர் கூறினர்.
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-05-2022) என்னவென்று தெரிந்
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ந
தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் ப
வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாக
பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்
மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குற
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
