யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் அவரை கடப்பாறையால் அடித்து கொலை செய்ததோடு மாமியாரையும் அடித்து கொலை செய்துள்ளார் முருகன். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை அடுத்த கட்சிக்குச்சான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தினமும் மது அருந்து முருகன், மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நாளடைவில் அவர் மீது சந்தேகப்பட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார். யாருடனும் எந்த பழக்கமும் இல்லைஎன்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட முருகன் கேட்கவில்லை.
நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமானதால் முருகனின் மனைவி மகாலட்சுமி கோபித்துக்கொண்டு அவர் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
உடனே முருக்கம்பட்டி சென்று மகாலட்சுமியை அழைத்திருக்கிறார். குடிபோதையில் இருந்த முருகனிடம் எந்தபதிலும் சொல்லவில்லை மகாலட்சுமி. இதனால், மாமியாரிடம் ஒன்று என் மகாலட்சுமியை என் வீட்டுக்கு அனுப்பிவை, இல்லை என்றால் நான் வாங்கிக்கிப்போட்ட நகைகளை திரும்ப கொடுத்துவிடு என்று சொல்லி இருக்கிறார்.
இதனால் மாமியார் அவரை சமாதானப்படுத்தி சாப்பாடு போட்டு தூங்கச்சொல்லி இருக்கிறார்.
சாப்பிட்டுவிட்டு தூங்கிய முருகன், நள்ளிரவில் எழுந்து கடப்பாரையை எடுத்து மகாலட்சுமியையும் , அவரது தாயாரையும் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
முருகனை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அரசு கவிழ்வதற்கு ஜெகத்ரட்சகன் காரணம் என கு
ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட
ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச
தொழிலதிபரை மணந்த சில நாட்களில் கன்னட நடிகை ஒருவர் பின
இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்ட
மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்
தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை
கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டு
இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா
