யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் அவரை கடப்பாறையால் அடித்து கொலை செய்ததோடு மாமியாரையும் அடித்து கொலை செய்துள்ளார் முருகன். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை அடுத்த கட்சிக்குச்சான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தினமும் மது அருந்து முருகன், மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நாளடைவில் அவர் மீது சந்தேகப்பட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார். யாருடனும் எந்த பழக்கமும் இல்லைஎன்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட முருகன் கேட்கவில்லை.
நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமானதால் முருகனின் மனைவி மகாலட்சுமி கோபித்துக்கொண்டு அவர் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
உடனே முருக்கம்பட்டி சென்று மகாலட்சுமியை அழைத்திருக்கிறார். குடிபோதையில் இருந்த முருகனிடம் எந்தபதிலும் சொல்லவில்லை மகாலட்சுமி. இதனால், மாமியாரிடம் ஒன்று என் மகாலட்சுமியை என் வீட்டுக்கு அனுப்பிவை, இல்லை என்றால் நான் வாங்கிக்கிப்போட்ட நகைகளை திரும்ப கொடுத்துவிடு என்று சொல்லி இருக்கிறார்.
இதனால் மாமியார் அவரை சமாதானப்படுத்தி சாப்பாடு போட்டு தூங்கச்சொல்லி இருக்கிறார்.
சாப்பிட்டுவிட்டு தூங்கிய முருகன், நள்ளிரவில் எழுந்து கடப்பாரையை எடுத்து மகாலட்சுமியையும் , அவரது தாயாரையும் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
முருகனை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்ப
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 ம
6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆ
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக
மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ
மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய
சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய
போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்
