நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என்று முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
கொவிட் – 19 வைரஸின் நிலைமாற்றமடைந்த புதிய திரிபுகளின் தொற்றுக்குள்ளானவர்கள் நாட்டிற்குள் அடையாளங்காணப்படக்கூடும்.
எனவே எமது நாட்டுமக்களின் சுகாதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனில், அரசாங்கமானது ஏற்கனவே திட்டமிடப்பட்ட காலவரையறைக்குள் பொதுமக்களுக்கான தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியது அவசியமாகும்.
இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். உரிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தி
யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மே
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்த
கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தி
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழ
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ
முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எ
.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப
இரத்தினபுரியில் பெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும
கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்
நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ
