இந்தியில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான ‘தி பேமிலிமேன் 2’ வெப்தொடர் சர்ச்சையை கிளப்பியது. அதில் சமந்தா ஏற்று நடித்த போராளி கதாபாத்திரத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் தொடரை தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
விரைவில் இந்த தொடரின் மூன்றாம் பாகம் தயாராக உள்ளது. இதில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவின. சர்ச்சை தொடரில் நடிக்க விஜய் சேதுபதி எப்படி சம்மதித்தார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு நடிகர் விஜய்சேதுபதி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “நான் ஷாகித் கபூருடன் இணைந்து புதிய வெப் தொடரில் நடிக்கிறேன். மனோஜ் பாஜ்பாயுடன் சேர்ந்து எந்த தொடரிலும் நடிக்கவில்லை. ஆனாலும் அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது’’ என்றார். இதன்மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய் சேதுபதி.
அவர் நடித்துள்ள லாபம், கடைசி விவசாயி போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ப
நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மன
கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் விஜய் ச
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என
நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில
பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து
கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்போது ஸ்மோக்கிங் ரூம
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்த
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெ
சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்ட
அமெரிக்காவை சேர்ந்த நடிகை டகோடா ஸ்கை, ஆபாச படங்களில் ந
