More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்தியர்களை குறிவைத்து வன்முறை.. அதிபரிடம் இருந்து பறந்த உத்தரவு.. தென்னாப்பிரிக்காவில் பதற்றம்!
இந்தியர்களை குறிவைத்து வன்முறை.. அதிபரிடம் இருந்து பறந்த உத்தரவு.. தென்னாப்பிரிக்காவில் பதற்றம்!
Jul 17
இந்தியர்களை குறிவைத்து வன்முறை.. அதிபரிடம் இருந்து பறந்த உத்தரவு.. தென்னாப்பிரிக்காவில் பதற்றம்!

இந்தியர்களுக்கு எதிராக இனரீதியாக பதட்டமாக சூழல் நிலவுகிறதா என்பதை விசாரித்து அறிக்கை அனுப்புமாறு டர்பன் நகரத்திற்கு அந்நாட்டு மூத்த அமைச்சர்களை அனுப்பி உள்ளார் என தென்னாப்பிரிக்க அதிபர் சிலிக் ராமபோஸா. தென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த ஜேக்கப் ஜூமா, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக , விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அரசியல் சாசன நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டிருந்தது. அவா் நேரில் ஆஜராகாததால் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக அவருக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.



இதையடுத்து கடந்த 7-ஆம் தேதி தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா போலீஸாரிடம் சரணடைந்தாா். அவா் தற்போது க்வாஸுலு-நடால் மாகாணத்திலுள்ள எஸ்ட்கோா்ட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து தென் ஆப்பிரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்த வருகிறது



இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, க்வாஸுலு நடால் மாகாணத்தில் டா்பன் நகரிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த போராட்ட சூழலை பயன்படுத்தி இந்தியா்கள் அதிகம் வசிக்கும் ஃபீனிக்ஸ் புறநகா் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்தியர்களுக்கு எதிராக சூறையாடல்களும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன.



இந்திய வம்சாவளியினருக்கும் கருப்பினத்தவா்களுக்கும் இடையே வன்முறையாக வெடித்தது. இதற்கு பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுகிறார்கள். டர்பன் நகரில் இரு சமூகத்தினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.



இது தொடர்பாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் நலேடி பாண்டருடன் பேசும் போது, தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான பரவலான வன்முறை மற்றும் கலவரம் குறித்து இந்தியா சார்பில் கவலை தெரிவித்தார்.



இதையடுத்து பதற்றத்தைத் தணிப்பதற்காக காவல்துறை அமைச்சரும், க்வாஸுலு நடால் மாகாண முதல்வருமான பேகி சிலியை டா்பன் நகருக்கு அதிபா் சிறில் ராமபோஸா வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்தார் முன்னதாக, டா்பன் நகரிலுள்ள எதேக்வினி பகுதி நிலவரத்தை அவா் நேரில் பாா்வையிட்டாா். எனினும், பதற்றம் நிறைந்த ஃபீனிக்ஸ், பீட்டா்மரிட்ஸ்பா்க் ஆகிய புறநகா் பகுதிகளுக்கு அவா் செல்லவில்லை. அந்தப் பகுதிகளுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்யுமாறு அமைச்சா் பேகி சிலிக்கு ராமபோஸா உத்தவிட்டிருக்கிறார்.



இதனிடையே முன்னாள் அதிபரின் ஆதரவாளா்கள் பல்வேறு மாகாணங்களில் நடத்திய வன்முறைப் போராட்டங்களில் கடைகள் சூறையாடப்பட்டன. இந்தச் சம்பவங்களில் 110-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகி உள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் அரசுமுறை பயணமாக குவ

May10

தாய் நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் டொன

Jan25

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை வி

Aug22

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வ

Apr25

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா

Apr17

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராம

Feb13

லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்ட

Oct24

இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால

May22

மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நா

Mar31

ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்

May25

அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25

Jan27

உலகளவில் தற்போது 100,839,430 பேருக்கு கொரோனா வைரஸ்

Aug27

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Mar22

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக

Aug31

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 14 (21:42 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 14 (21:42 pm )
Testing centres