உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதேவ் தால் குளத்தில் நேற்று முன்தினம் 7 சிறுமிகள் படகு சவாரி சென்றனர். அவர்கள் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். படகு சவாரியின்போது சிறுமிகள் செல்போனில் செல்பி எடுக்க முயன்றதில் படகு கவிழ்ந்து, அனைவரும் தண்ணீரில் மூழ்கினர்.
அவர்களில் 4 சிறுமிகள் ஒருவழியாக நீந்திக் கரையேறிவிட்டனர். படகோட்டியும் நீந்தி தப்பித்துவிட்டார். ஆனால் 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர்.
கரையேறிய சிறுமிகளில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய மாவட்ட மாஜிஸ்திரேட்டு அசுதோஷ் நிரஞ்சன், இறந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த
தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற முன்னாள் முதல்-மந்திரி
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிய கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் உள்ள ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீச லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் எ ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கட
