வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணாணந்தராசா, தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வரும் ஜூலை 31ஆம் திகதியுடன் விலகுவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் அந்தக் கட்சியின் நகர சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.இந்த நிலையில் தமிழ் தேசியக் கட்சியை எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் ஆரம்பித்த நிலையில் அவர்களுடன் இணைந்து செயற்படுவதால் தமிழ் அரசுக் கட்சி அவரை வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தது.
எனினும் அது பின்னர் கைவிடப்பட்டது.இந்த நிலையில் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நகர சபைத் தலைவராகத் தொடர அவர் விரும்பாத காரணத்தினால் பதவி விலகுகின்றார் என்று தவிசாளர் கோ.கருணாணந்தராசா தெரிவித்தார்
வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப
இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி
இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா
இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததன் விளைவே இலங்கையில் த
இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி
போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்பு
நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப
துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமை
ஏ9 பிரதான வீதியின் கொக்காவில் பகுதியில் சீமேந்து ஏற்ற
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம்
