ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 20 பேர் பலியாகினர். ஜெர்மனியில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு மற்றும் மத்திய ஜெர்மனியின் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
அக்ர்வெய்லர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர். ஊருக்குள் வெள்ளம் திடீரென பாய்ந்ததால், வீடுகள் இடிந்தன. கார்கள் அடித்துச் செல்லப்பட்டு, சேதமடைந்தன. 50க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
வீடுகளின் மீது தவித்து வரும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலரை காணவில்லை. பல இடங்களில் வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெர்மனியின் பிரபல நகரமான வடக்கு ரினே வெஸ்ட்பாலியாவின் பெரும்பாலான பகுதிகளில் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் ஏற்பட்ட அரிப்புகளால் சாலைகள் கடுமையாக சேதமாகி துண்டிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச
தாக்கப்பட்ட போதும் பொதுமக்களை அருகில் சென்று சந்திப்
நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய நாள் முதல் அங்கு வசித
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக
ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுக
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) புற்று நோய் த
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச
உலகளவில் தற்போது 100,839,430 பேருக்கு கொரோனா வைரஸ்
போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீ
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் தொடர்ந்து 23 நாட்களாக
12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில்
தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நட
அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்
