கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (84). இவர், பெருங்குடல் பிரச்சினை காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 4ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது.
அதன் பிறகு, அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் காய்ச்சல் குறைந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவர் மருத்துவனையிலேயே தினமும் பிரார்த்தனை மற்றும் ஞாயிறு வழிபாட்டை நடத்தினார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை நடந்த 10 நாட்களுக்கு பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வாடிகன் திரும்பினார். கெமல்லி மருத்துவமனையில் இருந்து தனது சொகுசு காரில் புறப்பட்ட போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் செல்வதற்கு முன்பாக ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா பேராலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
பொதுவாக அவர் வெளிநாடு பயணங்களை முடித்துவிட்டு ஊர் திரும்பும் போது இந்த பேராலயத்தில் வழிபாடு நடத்துவது வழக்கம். போப் ஆண்டவர் பிரான்சிஸ், வரும் செப்டம்பர் 12 முதல் 15 வரை ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட தேர்தல் நடைமுறைதான் மேற்கு வங்காள கிராமப்புற பக
நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில்,
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுச
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.
ராஜஸ்தானில் ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பெண் ஒர
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்
நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீன
உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாம
ரஷியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தல
மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ
உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து
