கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (84). இவர், பெருங்குடல் பிரச்சினை காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 4ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது.
அதன் பிறகு, அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் காய்ச்சல் குறைந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவர் மருத்துவனையிலேயே தினமும் பிரார்த்தனை மற்றும் ஞாயிறு வழிபாட்டை நடத்தினார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை நடந்த 10 நாட்களுக்கு பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வாடிகன் திரும்பினார். கெமல்லி மருத்துவமனையில் இருந்து தனது சொகுசு காரில் புறப்பட்ட போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் செல்வதற்கு முன்பாக ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா பேராலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
பொதுவாக அவர் வெளிநாடு பயணங்களை முடித்துவிட்டு ஊர் திரும்பும் போது இந்த பேராலயத்தில் வழிபாடு நடத்துவது வழக்கம். போப் ஆண்டவர் பிரான்சிஸ், வரும் செப்டம்பர் 12 முதல் 15 வரை ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட் அமைப்ப
மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து சுமா
அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா 2023ம
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் ம
இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிய
ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெர
தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோனாக்ரி: மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கடந்த 1958ம் ஆண
வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை கு
ரிஷி சுனக் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி
அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு