More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கனமழையால் வெள்ளப்பெருக்கு ஜெர்மனி, பெல்ஜியத்தில் 120 பேர் பரிதாப பலி!
கனமழையால் வெள்ளப்பெருக்கு ஜெர்மனி, பெல்ஜியத்தில் 120 பேர் பரிதாப பலி!
Jul 17
கனமழையால் வெள்ளப்பெருக்கு ஜெர்மனி, பெல்ஜியத்தில் 120 பேர் பரிதாப பலி!

ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கினால் 120க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறி வருகிறது. பல  இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரங்களில் பாய்ந்து நாசம் செய்துள்ளது. ரைன்லேண்ட்- பாலடினேட்டை மாகாணங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 9 மாற்றுத் திறனாளிகள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தொடர் மழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் தான் பெரும்பாலானவர்கள் உயிர் இழந்துள்ளனர்.



இதுமட்டுமின்றி ஏராளமான வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வீடுகளில் சிக்கி தவித்த நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல், வடக்கு ரைன் - வெஸ்ட்பாலியாவில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, நேற்று முன்தினம் 1,300 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகின. ஆனால், அது தவறான தகவல்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர். வீடுகளில் சிக்கியுள்ள மக்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடியாததும், சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதுமே இந்த தவறான கணக்குக்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதேபோல், பெல்ஜியத்திலும் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. எல்லை பகுதிகள் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.



நீர்மட்டம் உயர்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறாமல் தவித்து வருபவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு வருகின்றனர். இதனிடையே இத்தாலியில் இருந்து மீட்பு குழுவினர் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். லிம்பர்க்கும் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இங்குள்ள மிகப்பெரிய ஆற்றின் கரைகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது. சுவிட்சர்லாந்திலும் ஏராளமான ஆறுகள் மற்றும் ஏரிகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிறிய பாலங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct15

வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை

Mar15

சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல

Mar08

உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து

Jan17

தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நட

Aug31

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாட

Feb15

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டு

Mar05

மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்

Mar07

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை வெளிக் கொண்டுவரவும் பாத

Mar14

உக்ரைன் நாட்டில் ரஷ்யா, புதிய போலி குடியரசை உருவாக்க ம

Sep19

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கி

Apr13

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவர

Mar09

ரஷ்ய அதிபர் புடினால் உக்ரைனில் ஒரு நகரத்தை கைப்பற்ற ம

Jan17

இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே உள்ள லனுவியோ என்ற

May30

இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும்

Jun16

ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 01 (03:00 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 01 (03:00 am )
Testing centres