கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்தில் பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கிய நடத்துனருக்கு, பேருந்து நிழற்குடையில் வைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவையில் இருந்து நேற்று காலை திருப்பூருக்கு 57 பயணிகளுடன் அரசுப்பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் நடத்துனர் பயணிகளுக்கு எச்சிலை தொட்டு பயணச்சீட்டு கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், கொரோனா பரவலுக்கு வழி வகுக்கும் என்பதால், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறி உள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாத நடத்துனர், தொடர்ந்து அவ்வாறே பயணச்சீட்டை கொடுத்து உள்ளார்.
இதனை அடுத்து பேருந்தில் பயணித்த ஒருவர், இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், சுகாதாரத் துறையினர் பேருந்து திருப்பூருக்கு வருவதற்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை செய்பவர்களுடன் தயார் நிலையில் காத்திருந்து உள்ளனர்.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் வந்தபோது, அரசுப்பேருந்தை நிறுத்திய அதிகாரிகள் அருகில் இருந்த பேருந்து நிழற்குடையில் வைத்து நடத்துனருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட வேண்டாம் என்றும் நடத்துனருக்கு அறிவுறுத்தினர்.
நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனை
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரத
தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏரா
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வர
மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால
தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் த
மேலும் சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ