வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹராரேயில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெஸ்லி மாதேவிர் 73 ரன்கள் எடுத்தார். ரியான் பர்ல் அதிரடியாக ஆடி 19 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
வங்காளதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. ஆனால் ஜிம்பாப்வே அணியினர் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், வங்காளதேசம் 19.5 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆபிப் உசைன் 24 ரன்கள் எடுத்தார்.
இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
ஜிம்பாப்வே சார்பில் லூக் ஜோங்வே, மசாகட்சா தலா 3 விக்கெட்டும், சதாரா, முசாராபானி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது வெஸ்லி மாதேவிருக்கு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்
கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ர
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக
ரியல் மெட்ரிட் முன்கள வீரர் கரீம் பென்சிமா தனது வாழ்க
ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந
கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க
இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ
இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனா
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்
வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி
