கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா. கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து பிற்பகலில் ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார் எடியூரப்பா. பாஜக மேலிட உத்தரவின் பேரில் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளார் .முதல்வராக தொடர வேண்டுமென மடாதிபதிகள் வலியுறுத்தி வந்த நிலையில் எதியூரப்பா இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து அறிவித்துள்ள அவர் , கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் . ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். ஜூலை 16 இல் டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் மோடி, அமித் ஷா ம், நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார்.
பாஜகவில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது கட்சியின் வழக்கம். எடியூரப்பாவுக்கு 75 வயதுக்கு மேல் ஆகி உள்ளதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டு வந்தது. எடியூரப்பா ராஜினமா செய்யக்கூடாது என அவர் சார்ந்த லிங்காயத் சமுதாய மடாதிபதிகள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். இந்த சூழலில் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்

இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே
புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட
பேரறிவாளனுக்கு பிணை வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியி
கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மே
இளைஞர் ஒருவர் வேலைமுடிந்து நள்ளிரவில் தினமும் 10 கி.மீற
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்
மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்த
தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு '
நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட
ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள்
