குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அஸ்தானா. எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரலாக இருந்த அவரை தலைநகர் டெல்லியின் போலீஸ் கமிஷனராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதனையடுத்து அவர் டெல்லி ஜெய் சிங் மார்க்கில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக அவருக்கு போலீஸ் படையினர் அணிவகுப்புடன் வரவேற்பு அளித்தனர். வருகிற 31-ந் தேதியுடன் அவர் ஓய்வுபெற இருந்த நிலையில் அவருக்கு ஒரு வருடம் பணி நீட்டிப்பு அளித்து மத்திய அரசு இந்த புதிய பதவியில் அவரை அமர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராகேஷ் அஸ்தானர் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக இருந்தபோது, அப்போதைய சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா இருந்தார். இருவரும் ஒருவரை பற்றி மற்றொருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இருவரும் அவர்களது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதிய போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில்
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ
பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்ன
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள மகாத்மா காந்திய
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க
தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ம
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி
குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வ
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வேட்
