நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சுமார் 3.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், அத்தியடிய பகுதியில் கல்கிசை காவல்துறையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 210 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
50, 41 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 21 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மொரட்டுவ பகுதியில் 25 வயது சந்தேகநபரும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கிராண்ட்பாஸ் பகுதியில் 10 கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோஹுவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்
டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்ப
அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று ந
உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மேனிக்க
இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமா
நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷா தயாரிப்புகளில்
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச
நாட்டில் மேலும் சிலப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும
தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தன
