சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்கள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து விட்டு, பகவதி அம்மன் கோவில் மற்றும் படகுத்துறைக்கு செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், படகுகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
அவர்கள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து விட்டு, பகவதி அம்மனை தரிசனம் செய்ய செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து, கடற்கரை பகுதியில் நடைபாதை கடைகளும் அதிகரித்தன. இது சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. அவர்கள் நடைபாதை கடைகளை அகற்ற கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று காலையில் குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) செல்வராஜ் உத்தரவின்பேரில், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் சுமார் 15 நடைபாதை கடைகளை அகற்றினார்கள். இதனால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட காஞ்சிபுரம
கேரளாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் கூடல் மாணிக்கம
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீச
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும்
ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந் மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைந தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர
