யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 376 பேர் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களிலும் ஒரு இலட்சம் பேருக்கு முதலாவது தடவை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 50 ஆயிரம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
தற்போது மூன்றாம் கட்டமாக இரண்டு இலட்சம் பேருக்கு முதலாவது தடவையாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டம் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகி நேற்றுடன் ஐந்தாவது நாளும் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ரீதியாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகின்றது.
நேற்றைய ஐந்தாவது நாளில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் மற்றும் வைத்தியசாலைகளில் என 22 ஆயிரத்து 34 பேர் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்” – என்றார்.
தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இற
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழ
ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை
சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர
ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவ
கொள்ளுபிட்டியில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தப்பட்டு
கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்
மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சினம் கொண்டுள்ள மக்கள
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக த
