நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் உரிய நேரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசால் முடிவு செய்யப்படும். சுகாதார அதிகாரிகள் நிலைமையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்த பிறகு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
நாடு தற்போது கொரோனா சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள அதேவேளை, பொருளாதாரம் மற்றும் சமூக அம்சங்களை சமநிலையாக அரசு பேணி வருகின்றது.
எனினும், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் அல்லது நாடு முடக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உணர்ந்தால், தயக்கமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அத்தோடு, மீண்டும் அறிவிக்கும் வரை பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்” – என்றார்.
கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமிய
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு
நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புப
பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்
சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி வ
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்ப
கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச ந
இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம
